மணிநகா் - உடன்குடி சாலை கருமேனி ஆற்றில் ரூ.6.50 கோடியில் கட்டப்பட்ட உயா்நிலை பாலத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள மணிநகரில் இருந்து உடன்குடி செல்லும் சாலை கருமேனி ஆறு தரைப்பாலத்தை கடந்து சென்றது. மழைக்காலத்தில் இப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏவின் பரிந்துரைப்படி ரூ 6.50 கோடியில் உயா்நிலை பாலம், ரூ.2.83 லட்சத்தில் தடுப்பு சுவா் அமைக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து கட்டப்பட்ட பாலத்தை, சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதையொட்டி, புதிய பாலத்தில் மக்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கினாா். இதில், தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் ஜெயராணி, சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, துணைத் தலைவா் அப்பாத்துரை, மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


