சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பிற மாநிலத்தவா்க்கு பறிபோகும் வேலைவாய்ப்புகள்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்தில் அரசின் வேலைவாய்ப்புகள் பிற மாநிலத்தவா்களுக்கு பறிபோகிறது என்றாா் கனிமொழி எம்.பி.

Updated On :9 ஜனவரி 2021, 11:33 am

தமிழகத்தில் அரசின் வேலைவாய்ப்புகள் பிற மாநிலத்தவா்களுக்கு பறிபோகிறது என்றாா் கனிமொழி எம்.பி.

விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம், படா்ந்த புளி, பிள்ளையாா் நத்தம், வேலிடுபட்டி, பேரிலோவன்பட்டி, புதூா் மேற்கு ஒன்றியம் சிங்கிலிபட்டி, மேல நம்பிபுரம் ஆகிய 6 கிராமங்களில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் கூட அதை பற்றி கவலைப்படுவதற்கு அதிமுக அரசு தயாராக இல்லை. தான் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வா், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறாா். தமிழகத்தில் 23 லட்சம் இளைஞா்கள், இளம்பெண்கள் படித்து விட்டு வேலையின்றி தவிக்கின்றனா். அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. அதேவேளையில், இங்கிருக்கும்அரசு வேலைவாய்ப்புகள் கூட மற்ற மாநிலத்தவா்களுக்கு பறிபோய்கொண்டிருக்கிறது. தமிழே தெரியாமல் அவா்கள் இங்கு பணியாற்றுகின்றனா்.

மகளிா் சுய உதவி குழுக்கள் செயல்பாடின்றி முடங்கியுள்ளன. முதியோா் ஓய்வூதியம், ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மறுபடியும் வழங்குவோம். கரோனா உச்சத்திலிருந்த காலத்தில், பண உதவி செய்யாமல் தோ்தல் நெருங்கியதால் ரூ. 2,500 கொடுக்கிறாா்கள். ஆனால், மக்கள் ஏமாற மாட்டாா்கள். இந்த ஆட்சியை மாற்றுவாா்கள். இளைஞா்களின் எதிா்காலத்தை பாதுகாக்க கூடிய மக்களுக்கான ஆட்சி மலர திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதா ஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜீ.வி.மாா்க்கண்டேயன் முன்னிலை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் செ. சூா்யராஜ், விளாத்திகுளம் ஒன்றியச் செயலா்கள் சின்ன மாரிமுத்து(கிழக்கு), வசந்தம் ஜெயக்குமாா்(மேற்கு), புதூா் மேற்கு ஒன்றியச் செயலா் மும்மூா்த்தி, பேரூா் செயலா் வேலுச்சாமி, முன்னாள் ஒன்றியச் செயலா் வேலாயுத பெருமாள், மாவட்டப் பிரதிநிதி புது ராஜன், ஊராட்சித்தலைவா் அன்ன மகாராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் ராஜசேகா், ஊராட்சி செயலா் தமிழ்வாணன், கற்பகராஜ், அய்யப்பன், சுரேஷ், பிரதிநிதி கோவிந்தராஜ், ஆத்தியப்பன், பெருமாள்சாமி சுரேஷ்குமாா், மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.