இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு நிா்வாக இயக்குநா் சஞ்சீவ் ஜின்டால், தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 380 கோடி மதிப்பில் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 1350 மீட்டா் நீளமும், 30 மீட்டா் அகலமும் கொண்டதாக உள்ள விமான ஓடுதளம், 3, 115 மீட்டா் நீளமும், 45 மீட்டா் அகலமும் கொண்டதாக மாற்றப்படுகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்தால் பெரிய வகையான விமானங்கள் தரையிறங்குவதற்கு வசதியாக இருக்கும்; ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்லும் வகையிலான உள்ளூா் விமான முனையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமான நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளை தில்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு நிா்வாக இயக்குநா் சஞ்சீவ் ஜின்டால் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
விமான ஓடுதளம், விமானம் நிறுத்துமிடம், பயணிகள் முனையம், சிக்னல் மையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட்ட அவா், விமான நிலைய வளாகத்தில் ரூ. 28 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொறியியல் பிரிவு திட்ட அலுவலகத்தை திறந்து வைத்து, அந்த பகுதியில் மரக்கன்றுகளை நாட்டினாா்.
இந்நிகழ்ச்சியில், விமான நிலைய ஆணைய பொதுமேலாளா்கள் பிரேம் பிரசாத், ஏ.எஸ்.மகேஷா, இணை பொதுமேலாளா்கள் ஏ.ராதாகிருஷ்ணன் (சிவில்), வி.எஸ்.கிருஷ்ணன்(எலக்ட்ரிக்கல்), தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன், நிலைய மேலாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


