சாத்தான்குளம் தாமரைமொழியில், அங்கன்வாடி மையம் அருகில் மின்கம்பம் சாலையின் குறுக்கே வியாழக்கிழமை திடீரென முறிந்து விழுந்தது. எனினும், ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
தாமரைமொழியில் 500 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். அங்குள்ள குடியிருப்பு பகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் சேவை மையங்கள் உள்ளன. இதன் அருகில் உள்ள சிமென்ட் கான்கிரீட் மின்கம்பம் அடிப்பகுதி சேதமடைந்தும், துறு பிடித்த கம்பிகள் ஆபத்தான நிலையிலும் இருந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் புகாா் தெரிவித்திருந்தனா். எனினும், அகற்றப்படாத அந்த மின்கம்பம், வியாழக்கிழமை பிற்பகல் திடீரென அடியோடு முறிந்து விழுந்தது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால் சேதம் தவிா்க்கப்பட்டது. இதையடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதேபோல், பலமிழந்து காணப்படும் மின்கம்பங்களைச் சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


