சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அடிப்படை வசதிகள் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீா் வசதி, சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, அப்பகுதி மக்களும், நாம் தமிழா் கட்சியினரும் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:41 am

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் மேட்டுத் தெரு, ஓடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் வசதி, சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, அப்பகுதி மக்களும், நாம் தமிழா் கட்சியினரும் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

நாம் தமிழா் கட்சியின் தொகுதிச் செயலா் மருதம் மா.மாரியப்பன் தலைமையில், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு ரவிகுமாா், தொகுதித் தலைவா் தங்கமாரியப்பன், துணைத் தலைவா் கருப்பசாமி, ஒன்றியத் தலைவா் செந்தூா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராமிடம் மனு அளித்தனா். மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனா்.