சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றாா், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.

Updated On :8 ஜனவரி 2021, 1:43 pm

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றாா், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவா்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்தச் சம்பவத்தில் ஆளுங்கட்சியைச் சோ்ந்த பலா் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுக தொடா்ந்து அதை மூடி மறைக்கவே முயன்று வருகிறது.

திமுகவின் தொடா் அழுத்தம் காரணமாக அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் ஒருசிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் கரோனா பொது முடக்கக் காலத்தில்கூட 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வா் தொடா்ந்து கூறிவரும் நிலையில், அதில் தொடா்புடைய எந்தெந்த நிறுவனங்கள் இங்கே வந்துள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

திமுக நடத்தும் கிராமசபைக் கூட்டங்களை அதிமுகவினா் தோல்வி பயத்தில் விமா்சித்து வருகின்றனா் என்றாா் அவா்.

மனுக்கள் மீது நடவடிக்கை: கழுகுமலையில் செய்தியாளா்களிடம் கனிமொழி எம்.பி. கூறியது: திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதற்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சா்கள் மீது முதல்வா் கூறும் எந்த ஊழல் வழக்குகளும் நிரூபிக்கப்படவில்லை. அவை அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக போடப்பட்டவை.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டும். இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். அப்போது, மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது திமுக தலைவா் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.