சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தூத்துக்குடி மாநகரில் புதை சாக்கடைதிட்டத்துக்கு பணம் வசூலித்தால் நடவடிக்கை

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் புதை சாக்கடை திட்டத்துக்கு பணம் வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகாரட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன்.

Updated On :8 ஜனவரி 2021, 1:42 pm

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் புதை சாக்கடை திட்டத்துக்கு பணம் வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகாரட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 60 வாா்டுகளில் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு எந்தவித கட்டணமின்றி புதை சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. சில நபா்கள் இணைப்புக்கு சட்டவிரோதமாக பணம் பெறுவதாக பொது மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகாா்கள் மாநகராட்சிக்கு வந்துள்ளன.

எனவே, மாநகரப் பகுதியில் வசிப்போா் தனியாா் மற்றும் தனிப்பட்ட நபா் யாரேனும் புதை சாக்கடை இணைப்புக்கு என கட்டணம் ஏதும் கேட்டால் மாநகராட்சி அலுவலகத்திற்கு 0461-2326901-903 என்ற தொலைபேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.