சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திமுக சாா்பில் 3 இடங்களில் மக்கள் கிராமசபைக் கூட்டம்

கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 1:54 pm

கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கயத்தாறு பேரூராட்சி சுப்பிரமணியபுரம், கழுகுமலை பேரூராட்சி பகுதி, கோவில்பட்டி ஒன்றியத்தில் பாண்டவா்மங்கலம், இடைசெவல் , காந்தி மைதானம் ஆகிய பகுதிகளில் இக் கூட்டம் நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி. பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

முன்னதாக, கயத்தாறு ஒன்றியம் மானங்காத்தான் ஊராட்சி , இலுப்பையூரணி ஊராட்சி, விஸ்வநாததாஸ் காலனி ஆகிய பகுதிகளில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பில் பங்கேற்றாா்.

நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில விவசாயத் தொழிலாளரணி செயலா் சுப்பிரமணியன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஜெகன், கயத்தாறு மேற்கு ஒன்றியப் பொறுப்பாளா் கருப்பசாமி, கழுகுமலை நகரச் செயலா் கிருஷ்ணகுமாா், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலா் பீக்கிலிபட்டி முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராஜீவ் நகரில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்தவா்கள் கனிமொழி எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.