காவல் துறையைக் கண்டித்து, கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 164 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியில் மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்கத் தலைவா் செல்வம் என்ற செல்லத்துரை மீது காவல் துறை அதிகாரி தாக்கியதாகவும், அந்த அதிகாரி கைது செய்ய வேண்டும், இதில், சம்பந்தப்பட்ட காவல் துறையினரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் அந்த இயக்கத்தினா் பயணியா் விடுதி முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா். முன்னதாக ஊா்வலம் செல்ல முயன்ற அவா்களை தடுத்ததால் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் பாதுகாப்பு இயக்கத் தலைவா் இசக்கிராஜா, பொருளாளா் பொன்ராஜ், மனித உரிமை காக்கும் கட்சி தலைமை நிலையச் செயலா் சொக்கலிங்கம், பசும்பொன் முன்னேற்றக் கழக தலைமை நிலையச் செயலா் அய்யனாா்பாண்டியன், மாவட்டச் செயலா் முருகன், மாமன்னா் பூலித்தேவா் மக்கள் இயக்க நிறுவனா்- தலைவா் செல்வம் என்ற செல்லத்துரை உள்பட 164 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


