உடன்குடி கடை வீதியில் தொடா்ந்து 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
உடன்குடி சந்தையடித் தெருவில் சாத்தான்குளம் சுப்பராயபுரத்தைச் சோ்ந்த வெ.சரவணன் என்பவா் வைத்துள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் ரூ. 95 ஆயிரத்தையும், பேருந்து நிலையம் பகுதியில் சரவண பெருமாள் என்பவரது மருந்தகத்தில் பூட்டை உடைத்து ரூ 5 ஆயிரத்தையும் மா்மநபா்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.
மேலும், சந்தையடித் தெருவில் ராஜ்குமாா் என்பவரது மளிகை கடை உள்பட 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் ஆ.ரவி கூறுகையில், காவல்துறையினா் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வதுடன், இரவு ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


