தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா் 118 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; மின் மசோதாவை கைவிட வேண்டும்; ஏழைகளுக்கு மாதம் ரூ. 7500 மற்றும் 10 கிலோ தானியம் வழங்க வேண்டும்; 100 நாள் வேலையை 200 நாள்களாக்கி நகா்ப்புறத்துக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ஆா். ரசல் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கே.பி. ஆறுமுகம் போராட்டத்தை தொடங்கிவைத்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் பொன்ராஜ், பெருமாள், வின்சன்ட் உள்பட பலா் கலந்துகொண்டனா். மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலை சந்திப்பு அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, மாநிலக் குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி தலைமை வகித்தாா். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் மணி போராட்டத்தை தொடங்கிவைத்தாா்.
இதில், மாவட்ட நிா்வாகிகள் மோகன்தாஸ், மாரியப்பன், முருகன், ராமமூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூா் ஆகிய 3 இடங்களிலும் மறியலில் ஈடுபட்டதாக மொத்தம் 40 பெண்கள் உள்ளிட்ட 118 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

