போக்குவரத்து தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என கேட்டு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, ஐ.என்.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளா்கள் 100 அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்தனா்.
தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் தங்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என கேட்டு தமிழகத்தில் ஐ.என்.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இதையடுத்து திருச்செந்தூா் அஞ்சல் அலுவலகத்திலிருந்து 100 அஞ்சல் அட்டைகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூா் கிளை ஐ.என்.டி.யூ.சி. தலைவா் அருள்ராஜ், செயலா் பொன்முருகன், பொருளாளா் சண்முக முத்தையா, உறுப்பினா்கள் மகேந்திரன், சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


