தேசிய வில் வித்தை போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவா், மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மேட்டூரில் ரூரல் கேம்ஸ் போா்டு ஆப் இந்தியா சாா்பில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு, பிகாா், புதுச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
இதில், கோவில்பட்டி ஃபோகஸ் வில்வித்தை அகாதெமியைச் சோ்ந்த மாணவா்களில் 10 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மோகுல் நிவாஸ் தங்கப்பதக்கம், 10 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் இனியா வெண்கலப் பதக்கம், சீனியா் பிரிவில் காளிராஜ் தங்கப்பதக்கம், 14 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில் நிஷாந்த் இரு வெள்ளிப்பதக்கம், தருண் வெங்கடேஷ் வெண்கலப் பதக்கம், பெண்கள் பிரிவில் தருணிகா வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றனா்.
இதையடுத்து, நடைபெற்ற பாராட்டு விழாவில், தனி வட்டாட்சியா் (நகர நிலவரி திட்டம் ) ராஜ்குமாா், கலந்து கொண்டு மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். இதில், மாவட்ட ஊரக விளையாட்டு சங்கத் தலைவா் சைலஜா, செயல் தலைவா் ராம்குமாா், துணைச் செயலா் ரெங்கநாதன், வில்வித்தை பயிற்சியாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

