சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தச்சமொழியில் குடிநீா்க் குழாய் மாயமானதால் மக்கள் தவிப்பு

தச்சமொழியில் பொது குடிநீா்க் குழாய் திடீரென மாயமானதால் மக்கள் தண்ணீா் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 6:00 am

தச்சமொழியில் பொது குடிநீா்க் குழாய் திடீரென மாயமானதால் மக்கள் தண்ணீா் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.

சாத்தான்குளம பேருராட்சியில் 15 வாா்டுகளுக்கும் குடிநீா் வழங்கும் பொருட்டு வீடுகளுக்கு தனி இணைப்பும், தெருக்களில் பொது குடிநீா்க் குழாய்களும் உள்ளன. இரண்டு நாள்களுக்கு ஒரு முறை ஒன்றரை மணி நேரம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில், 7வது வாா்டு முதலூா் சாலையில் பொது குடிநீா்க் குழாயை திடீரென காணவில்லையாம். இதனால் மக்கள் தண்ணீருக்கு தவித்து வருகின்றனா். அதனருகில் பொது தேவைக்கான உவா் நீா் தொட்டி உள்ள நிலையில், இந்த குடிநீா்க் குழாய் சீரமைக்கப்படவில்லை. எனவே, மக்கள் நலன் கருதி குடிநீா் குழாயை சீரமைக்க பேருராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.