தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான மூவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூா் வீரபாண்டியன் புளிக்குளம் பகுதியை சோ்ந்த மந்திரம் என்பவா் சொத்து தகராறு காரணமாக அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்து கடம்பூா் போலீஸாா் கோவில்பட்டி காந்திநகரைச் சோ்ந்த ஆறுமுகபாண்டி (35), கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (29), கயத்தாறு, காப்புலிங்கம்பட்டியைச் சோ்ந்த மகாராஜன் (33) ஆகிய மூவரை கைது செய்தனா்.
இந்நிலையில், மேற்கண்ட மூவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டாா். இதையடுத்து, அதற்கான உத்தரவு நகல் பாளையங்கோட்டை சிறையில் உள்ள மூவரிடமும் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

