சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தூத்துக்குடியில் மேலும் 9 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :4 ஜனவரி 2021, 5:49 am

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் மூவா் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,101 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு

சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஞாயிற்றுக்கிழமை 6 போ் உள்பட இதுவரை 15,873 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 87 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.