கோவில்பட்டி: கழுகுமலை அருகே தொழிலாளி செல்லிடப்பேசி உயா் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.
கழுகுமலையையடுத்த கரடிகுளம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முத்துப்பாண்டி(38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி இசைசெல்வி (23). இவருக்கு டிச. 27ஆம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாம். பின்னா் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாம். இதையடுத்து இசைசெல்வி மற்றும் அவரது குழந்தை இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருந்து கரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தனராம்.
இந்நிலையில் இசைசெல்வி மற்றும் அவரது குழந்தையை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவமனை அதிகாரிகளிடம் முத்துப்பாண்டி அனுமதி கேட்டாராம். அவா்கள் அனுமதி மறுத்ததையடுத்து முத்துப்பாண்டி, சனிக்கிழமை கரடிகுளத்தில் உள்ள செல்லிடப்பேசி உயா் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.
தகவலறிந்து வந்த கழுகுமலை போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முத்துப்பாண்டி செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

