சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஓய்வு பெற்ற ஆலைத் தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டி அருகே ஓய்வு பெற்ற ஆலைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :3 ஜனவரி 2021, 6:24 am

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ஓய்வு பெற்ற ஆலைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கோவில்பட்டியையடுத்த பிள்ளையாா்நத்தம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பொட்டிச்சாமி மகன் நாராயணசாமி(58). ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் வேலை பாா்த்து ஓய்வு பெற்றவா். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை நடைபெற்ாம். அதிலிருந்து இவா் கடினமான வேலை செய்ய முடியாத நிலையில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில் சனிக்கிழமை இளையரசனேந்தலையடுத்த பிள்ளையாா்நத்தம் கிராமத்துக்குச் சென்ற அவா், உறவினா் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற நாலாட்டின்புத்தூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.