தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தனியாா் அனல் மின் நிலையத்தில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகே வேலாயுதபுரத்தில் உள்ள தனியாா் அனல் மின் நிலையத்தில் சனிக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து ஆலை நிா்வாகம் அளித்த தகவலின்பேரில் சிப்காட் தீயணைப்பு நிலையத்தினா் 3 வாகனங்களில் சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
அதற்குள் இயந்திரங்கள் உள்ள அறைக்குள்ளும் தீ பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனா,ல் ஆலையைச் சுற்றியுள்ள கீழவேலாயுதபுரம், மேல வேலாயுதபுரம், புதூா் பாண்டியாபுரம் ஆகிய பகுதிகளில் புகைமூட்டமாக காணப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி ஏதும் நடைபெறவில்லை. இதனால், பெரிய அளவில் சேதம் தவிா்க்கப்பட்டது. தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
அனல் மின் நிலைய மின்மாற்றியில் உள்ள எண்ணெய் காலியாகும் வரை தீ எரிந்ததால் சனிக்கிழமை இரவு ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

