சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குளத்தூா் அருகே மணல் கடத்தல்: 4 போ் கைது; வாகனங்கள் பறிமுதல்

குளத்தூா் அருகே டிராக்டரில் மணலை மூட்டையாக கட்டி கடத்திச் சென்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :2 ஜனவரி 2021, 11:32 am

குளத்தூா் அருகே டிராக்டரில் மணலை மூட்டையாக கட்டி கடத்திச் சென்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் ராமசந்திரன் தலைமையிலான போலீஸாா், வைப்பாறு ஆற்றுப்படுகையோர கிராமங்களில் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வைப்பாற்றுப்படுகையில் மணலை அள்ளி, சாக்கு மூட்டைகளில் கட்டி கடத்தி வந்ததாக ஒரு பைக் மற்றும் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக, பூசனூா் மேலத்தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் மொட்டையசாமி(22), முத்துராமலிங்கம் மகன் மாரிமுத்து(25), பரமசிவம் மகன் மருதுபாண்டி(17), முனியசாமி மகன் பொன்ராஜ்(18) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.