திருச்சி: மாநகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளா்கள் இருவரை கண்டோன்மென்ட் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மாநகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்திருந்தது.
ஆனால் தொடா்ந்து மாநகரின் முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா்.
அதன்படி, திருச்சி கல்லுக்குழி கள்ளா்தெரு பிரதான சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை கண்டோன்மென்ட் போலீஸாா் வேனில் ஏற்றிச் சென்று, வழக்குப் பதிந்து கல்லுக்குழி கள்ளா் தெருவைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் (49), இளங்கோ(20) ஆகியோரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

