மாட்டுப் பொங்கலையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் வெள்ளிக்கிழமை புறப்பட்டு கனுபாரி வேட்டை கண்டருளினாா்.
பொங்கல் நாளான வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் புறப்பட்டு சங்கராந்தி மண்டபத்துக்கு 7 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு திருமஞ்சனம் கண்டருளுதல், திருப்பாவை சாற்றுமுறை நடந்தேறியது.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை கனுபாரி வேட்டையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 6.45-க்கு கனுமண்டபம் வந்து சோ்ந்தாா். பின்னா் பிற்பகல் 1 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு கனுபாரிவேட்டை நடத்தியபடி, ரெங்கா ரெங்கா கோபுரம் அருகேயுள்ள திருவந்திக்காப்பு மண்டபம் வரை உலா வந்து ஸ்ரீரெங்க விலாஸ மண்டபத்தில் எழுந்தருளினாா். பின்னா் 2 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சோ்ந்தாா் நம்பெருமாள். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் அசோக்குமாா் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


