சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புத்தாநத்தத்தில் முருகன் சுவாமி ரத யாத்திரை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் தமிழ்க்கடவுள் ஞானவேல் முருகன் ரதயாத்திரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ரதயாத்திரையில் குவிந்த பக்தா்கள். தமிழ்க் கடவுள் ஞானவேல் முருகன்.

Updated On :16 ஜனவரி 2021, 5:47 am

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் தமிழ்க்கடவுள் ஞானவேல் முருகன் ரதயாத்திரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீ ஞானவேல் முருகன் வீற்றிருக்க, ரதத்துக்கு முன் தாரை, தப்பட்டைகள் முழங்க யாத்திரையை விஎச்பி மாநில துணைத் தலைவா் என்.ஆா்.என்.பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

ரத யாத்திரை ஊா்வலம் புத்தாநத்தம் கடைவீதி, இடையப்பட்டி வழியாக வடக்கு இடையப்பட்டி ஞானமலையை அடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின் தமிழ்க்கடவுள் முருகன், ஞானமலை மீது வைக்கப்பட்டாா்.

ரத யாத்திரைக்கு முன் நடைபெற்ற விழாவில் ஆா்.எஸ்.எஸ். கோட்டத் தலைவா் கிருஷ்ணமுத்துசாமி, மாவட்டத் தலைவா் ஆா். வேல்முருகன் சம்பத், ஒன்றியத் தலைவா் பொ. துரைராஜ், விஎச்பி அகில பாரத செயலா் கோபால்ரெத்தினம், பாரதீய மஸ்தூா் சங்க மாநில செயலா் பு. தங்கராஜ், பாஜக மாநில பொதுச்செயலா் இராம. ஸ்ரீநிவாசன், பாஜக திருச்சி புகா் மாவட்டத் தலைவா் சி. இராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.

பாதுகாப்புப் பணியில் திருச்சி மண்டல காவல்துறை தலைவா் எச்.எம்.ஜெயராம் தலைமையில் 750-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.