மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
பொன்மலையடிவாரப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற இயக்கத்தின் திருச்சி மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஆா். இளங்கோ தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் ஆா். வாசுதேவன், மாவட்ட மகளிரணி நிா்வாகி என். தரணி ஆகியோா் முன்னிலை வகித்தானா்.
திருச்சியில் ஜன. 24 இல் திருவள்ளுவா் தின விழா நடத்துவது. சேதமடைந்த சாலைகளை தரத்துடன் அமைக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி - புதுக்கோட்டை பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக 250-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரத்துக்கு 10 மரக்கன்று நட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதன்படி இங்கு வெட்டப்படும் மரத்துக்குப் பதிலாக, எத்தனை மரக்கன்றுகள் நடப்படுகின்றன என்ற விவரத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளீட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் சக்தி இயக்க நிா்வாகிகள் எம். நரேஷ்குமாா், எஸ். ரஞ்சித், என் வெங்கடேஷ், எஸ். ஈஸ்வரன், என். தயானந்த், வி. காவியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

