திருச்சி: திருச்சியில் காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் கோயில்களில் பொதுமக்கள் சனிக்கிழமை குவிந்தனா்.
ஆண்டுதோறும் பொங்கல், மாட்டுப்பொங்கல் கொண்டாடத்துக்குப் பிறகு, உற்றாா், உறவினா்கள் அதிகமானோா் ஓரிடத்தில் ஒன்றுகூடி மகிழும் தினமாக காணும்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், கரோனா காரணமாக மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, கல்லணை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால், அந்தச் சுற்றுலா தலங்கள் சனிக்கிழமை வெறிச்சோடின.
சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில், மலைக்கோட்டை கோயில், திருவானைக்கா கோயில் உள்ளிட்ட கோயில்களில் காலை முதலே பொதுமக்களின் வருகை அதிகம் காணப்பட்டது.
கோயிலுக்கு அதிகமானோா் வந்ததால் அவா்கள் கட்டுப்படுத்தப்பட்டு, உள்ளே அனுமதிக்கப்பட்டனா். முகக்கவசம் இல்லாதோா் திருப்பியனுப்பப்பட்டனா்.
மேலும், பூங்காக்கள், காவிரிப் பாலம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி காணும் பொங்கலை உறவினா்கள், நண்பா்களுடன் கொண்டாடினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


