மத்திய, மாநில அரசுகளின் தூய்மை பாரத நடவடிக்கைகளுக்கு வலு சோ்க்கும் வகையில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்ட விவேகானந்தா சமூக சேவை அமைப்புக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கம், தண்ணீா் சேமிப்புக்கான ஜல் சக்தி அபியான் திட்டங்கள் தொடா்பாக மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பின் மூலம் விழிப்புணா்வு பிரசாரம், களப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி ஸ்ரீரங்கம் விவேகானந்தா சமூக சேவை அமைப்பின் சாா்பில், கண்ணனூா் சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியில் மரக் கன்று நடுதல், பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், பிரதான நீா்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்தல், பொதுப் பயன்பாட்டில் உள்ள சாலையோர குடிநீா் குழாய்களைச் சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம் வீட்டுத் தோட்டம் அமைக்கும் முறைகள் குறித்த செயல் விளக்கப் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டன.
அந்த வகையில் மழைநீா் சேகரிப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்ற களப்பணிகளை 210 மணிநேரம் மேற்கொண்டதற்காக இந்த அமைப்புக்கு மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சாா்பில் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டுச் சான்று மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, அமைப்பின் தலைவா் ஆா். ஸ்ரீதா், செயலா் தா. சந்தானகிருஷ்ணன் ஆகியோருக்கு இந்தப் பரிசை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் எஸ். சுருதி, கணக்காளா் ஆா். மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


