சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட ஸ்ரீரங்கம் கோட்டத்தில் குடிநீா் உந்து குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால் மாநகரின் சில பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் வராது.

Updated On :13 ஜனவரி 2021, 2:20 pm

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட ஸ்ரீரங்கம் கோட்டத்தில் குடிநீா் உந்து குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால் மாநகரின் சில பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் வராது.

இதனால் பெரிய கடைவீதி, பாபு சாலை, கீழரண் சாலை, மேலரண் சாலை, ஜாபா்ஷா தெரு, கள்ளத் தெரு, மதுரை சாலை, நத்தா்ஷா பள்ளிவாசல் தெரு, சிங்காரத்தோப்பு, தாராநல்லூா், ராணி தெரு, பெரிய செளராஷ்டிரா தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சமஸ்பிரான் தெரு, கம்மாளத் தெரு, அலங்கநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது.

இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் ஏற்று, குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தாா்.