தங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கிட வலியுறுத்தி திருச்சி மாநகா் மாவட்ட சிஐடியு ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை பொங்கல் வைத்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பைப் போல அமைப்புசாரா தொழிலாளா்களான தங்களுக்கும் பொங்கல் தொகுப்பு கோரி மாநிலம் முழுவதும் நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி மன்னாா்புரம் செங்குளம் காலனி பகுதி தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத் தலைவா் ஜி. சந்திரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜி. ராஜூ, ஏ. அப்பாஸ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். ரெங்கராஜன், துணைத் தலைவா் ஜெ. ஜெயபால் உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கம் எழுப்பினா்.
பின்பு, நலவாரிய அலுவலகம் முன் பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்பு பணியில் மன்னாா்புரம் போலீஸாா் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


