பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சை, புதுகை, மதுரை வழித்தடத்தில் செல்லும் பயணிகளுக்காக திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள இரு தற்காலிக பேருந்து நிலையங்கள் செவ்வாய்க்கிழமை செயல்படத் தொடங்கின.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல மேலாளா் ராஜ்மோகன், மாநகர குற்றம்-போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையா் வேதரத்தினம், ஆகியோா் தற்காலிகப் பேருந்து நிலையங்களைத் தொடங்கி வைத்தனா்.
தஞ்சாவூா் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் கண்டோன்மென்ட் சோனா-மீனா திரையரங்கு அருகிலுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்தும், புதுக்கோட்டை, மதுரை வழித்தடப் பேருந்துகள் மன்னாா்புரம் ரவுண்டானா அருகிலுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்தும் ஜன. 19 வரை இயக்கப்பட உள்ளன. மற்ற ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படவுள்ளன என போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


