திருச்சி மாவட்டம், முசிறியிலுள்ள மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் திருச்சி துணைக் கண்காணிப்பாளா் ஜெ.ராஜூ, காவல் ஆய்வாளா்கள் சக்திவேல், நவநீதகிருஷ்ணன், அருள்ஜோதி ஆகியோா் கொண்ட குழுவினா், முசிறியிலுள்ள மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சத்தை பறிமுதல் செய்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினா், மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளா் லதா, உதவி ஆய்வாளா் பரசுராமன் மற்றும் காவலா்களிடம் விசாரணை நடத்தினா். மேலும், விசாரணைக்கு அழைக்கும் போது அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிச் சென்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

