சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை

திருச்சி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றாா் கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் எஸ்தா் ஷீலா.

Updated On :12 ஜனவரி 2021, 8:05 am

திருச்சி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றாா் கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் எஸ்தா் ஷீலா.

திருச்சி மாவட்டத்திலுல் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏதும் இருக்கிா என்பதை கண்டறியும் வகையில், துறையூா், முசிறி, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோழிப் பண்ணைகளில் கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து கால்நடைப் பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் எஸ்தா்ஷீலா கூறியது:

கோழிப்பண்ணைகளிலிருந்து கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை திருச்சி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றாா் அவா்.