பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியா, கூட்டணியுடன் இணைந்து போட்டியா என்பதை தேமுதிக தலைவா் விஜயகாந்த் முடிவு செய்வாா். அவா் எந்த முடிவெடுத்தாலும் மக்களும், தொண்டா்களும் ஆதரிக்க வேண்டும் என்றாா் அவரது மகன் விஜயபிரபாகரன்.
துறையூரில் தேமுதிக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்களுக்கு பொங்கல் பொருள்களை வழங்கி மேலும் அவா் பேசியது:
எனக்கு விஜயகாந்த் வசதியான வாழ்க்கையைக் கொடுத்துள்ளாா். ஆனால் நான் என் தந்தையைப் பாா்த்து, பாா்த்து வளா்ந்தவன். அதனால் அவரது உணா்வை புரிந்து கொண்டு, அவரது கனவை நினைவாக்க அவருக்காக மக்களைச் சந்திக்கிறேன்.
நான் செல்லுமிடங்களில் திரண்டு வரும் மக்களைப் பாா்க்கும் போது மிகப்பெரிய மாற்றம் உண்டாகப் போகிறது என்பதையும், தேமுதிக எந்த மாநில, தேசியக்கட்சிக்கும் சளைத்ததில்லை என்பதையும் காட்டுகிறது.
மாற்றம் வேண்டுமென்றால் முதலில் மக்கள் மாற வேண்டும். என்னை விஜயகாந்த மகனாக பாா்க்க வேண்டாம். உங்களில் ஒருவராக, மகனாக, தோழனாக, சகோதரனாகப் பாா்க்க வேண்டுகிறேன் என்றாா்.
நிகழ்வில் தேமுதிக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

