கோயில் புனரமைப்பு பணிகளில் வெளிப்படைத் தன்மை அவசியம் என்றாா் திருத்தொண்டா்கள் சபை நிறுவனா் ஆா். ராதாகிருஷ்ணன்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சபை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் தெரிவித்தது:
அரசியல் சாா்புள்ள இந்து இயக்கங்கள் இந்துக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. இந்துக்களுக்கு எதிராக என்ன நடந்தாலும் அவை கண்டுகொள்வதில்லை. இனிவரும் காலங்களில் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படும், அவதூறாகப் பேசும் எந்தக் கட்சியும் வாக்கு பெறமுடியாது. இந்துக்களை பகைத்துக் கொள்ளும் கட்சிகள் தோ்தல்களில் டெபாசிட்கூட பெற முடியாது.
தமிழகத்தில் கோயில்களுக்குச் சொந்தமான சுமாா் 10 லட்சம் ஏக்கா் நிலங்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவை மீட்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டால், அதன்மூலம் அறநிலையத் துறைக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
மேலும், அறநிலையைத் துறையை சீரமைக்கவும் வேண்டும். கோயில் சொத்துகளின் ஆவணங்கள், அறநிலையத் துறை அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்வதில் அறநிலையத் துைான் முதலிடத்தில் உள்ளது.
கோயில்கள் புனரமைப்பில் வெளிப்படைத் தன்மை வேண்டும். கோயில்களில் திருப்பணி செய்ய அனுமதி பெறுவதற்குள் உபயதாரா்கள் கடும் அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்படுகின்றனா். இந்நிலை மாற வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


