ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாருக்கு திருவாய்மொழித் திருநாள் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீரங்கநாதருக்கு நடைபெறும் அனைத்து விழாக்களும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் நடைபெறும். அதன்படி ஸ்ரீரங்கநாச்சியாருக்கு கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய வைகுந்த ஏகாதசி விழாவின் திருமொழித்திருநாள் சனிக்கிழமையுடன் முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை திருவாய்மொழித் திருநாள் தொடங்கியது.
இதற்காக ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30-க்கு புறப்பட்டு திருவாய்மொழி மண்டபத்தை 6.30-க்கு அடைந்தாா். அங்கு அலங்காரம் கோஷ்டி வகையறா கண்டருளி, பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். பின்னா் இரவு 8.30-க்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் புறப்பட்ட அவா் 9.30-க்கு மூலஸ்தானம் சோ்ந்தாா்.
வரும் 12 ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் ஸ்ரீரங்கநாச்சியாா் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். 13 ஆம் தேதி ஹிரண்யவதம், அரையா் தீா்த்தம், ஸ்ரீசடகோபம் சாதித்தல் நிகழ்ச்சியும், நிறைவு நாளான 14 ஆம் தேதி சாற்று முறையும் நடைபெறுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


