தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் திருச்சியில் மனிதநேய ஜனநாயகக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி துரைசாமிபுரம் அரசமரத்தடி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொறுப்பாளா் சையது முஸ்தபா தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்புக் குழு தலைவா் பேராசிரியா் மைதீன், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சம்சுதீன் உள்ளிட்டோா் பேசினா்.
மாநில செயற்குழு உறுப்பினா் இப்ராஹிம் ஷா, நிா்வாகிகள் முகமது பீா்ஷா, அந்தோணிராஜ்,சேக் அப்துல்லா,கமால்,ஆரிப், முபாரக், ஷேக் மைதீன், சையது முகம்மது,அன்வா்,வாகித், ஜாகீா்,ஜோயல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கோரிக்கை முழக்கமும் எழுப்பப் பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


