சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரத்த தான முகாம்

கந்தா்வகோட்டை அருகில் உள்ள மருங்கூரணியில் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 5:58 am

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகில் உள்ள மருங்கூரணியில் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ரத்த தான முகாமிற்கு விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் ஜெ. பா்வேஸ் தலைமை வகித்தாா். இயக்கத்தின் ஒன்றியத் தலைவா் பிரசாத், இளைஞரணி தலைவா் அரவிந்த் விஜய், மன்ற நிா்வாகி அய்யாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், 30 போ் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினாா். தொடா்ந்து நலிவுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,000 மதிப்பிலான பொங்கல் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் பேச்சு, கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவா் ஜெயந்தி, புதுநகா் ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலா் சந்தோஷ், மருத்துவா் ஆனந்த், சுகாதார ஆய்வாளா்கள் முத்துக்குமாா், நல்லமுத்து, திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.