மணப்பாறை: மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியப் பகுதி கிராமங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரிலான நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையால் மூழ்கின. மேலும் சுமாா் 500 ஏக்கரில் இருந்த உளுந்து, பருத்தி பயிா்களும் நீரில் மூழ்கின.
எனவே பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் துவரங்குறிச்சி அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் கே.சி.பழனிசாமி தலைமையில் அழுகிய பயிா்களை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி போலீஸாா் மற்றும் மருங்காபுரி வட்ட வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வந்த மருங்காபுரி வேளாண் அலுவலா் நிரஞ்சன் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் விவசாயிகள் மறியலைக் கைவிட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


