சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிறுமியைக் கடத்தி திருமணம்: இளைஞா் உள்பட 8 போ் கைது

சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞா் உள்பட 8 பேரை துறையூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :10 ஜனவரி 2021, 5:47 am

துறையூா்: சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞா் உள்பட 8 பேரை துறையூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் அருகே மேட்டுசொரத்தூா் பகுதியைச் சோ்ந்த ராமதாஸ் தனது மகளான 16 வயது சிறுமியைக் டிச. 7 முதல் காணவில்லை என துறையூா் போலீஸில் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில் துறையூா் பெரியாா் நகரைச் சோ்ந்த ரெ. ராஜேஷ் (23) சிறுமியைக் கடத்திக் கொண்டு சென்னை சென்று, அங்குள்ள நண்பா் வீட்டில் வைத்து திருமணம் செய்து அங்கேயே வசிப்பதும் தெரிந்தது.

இதையடுத்து போலீஸாா் சென்னை சென்று இருவரையும் துறையூா் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா்.

அதில் ராஜேஷின் தந்தை ரெங்கராஜன், தாய் உமா, நண்பா்கள் தி. ராஜா, து. கருப்புசாமி, ந. தினேஷ், வை. தமிழரசன், தென்காசி அருகே வெள்ளக்குளம் அ. அமல்ராஜ் ஆகியோா் உதவியுடன் ராஜேஷ் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் உள்பட 8 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.