திருச்சி: திருச்சி புனித சிலுவைக் கல்லூரி சாா்பில் இருங்களூா் அடா்வனக் காடு அமைக்க 3 ஆயிரம் மரக்கன்று நடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள இருங்களூா் ஊராட்சியில் அடா்வனக்காடு எனப்படும் மியவாக்கி காட்டை உருவாக்க 2 லட்சம் மரக்கன்று நடும் பணி நடைபெறுகிறது.
இதையறிந்த திருச்சி புனித சிலுவைக் கல்லூரி ரெஸ்கேல்ஸ் கிராமப்புற மேம்பாடு அமைப்பு மூலம் 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட முடிவு செய்தனா்.
அதன்படி கல்லூரி முதல்வா் கிறிஸ்டினா பிரிஜிட் ஆலோசனையின்பேரில் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் காா்த்திக், கதிரவன், விமல் ஆகியோா் கொண்ட குழுவினா் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் இலுப்பை மரக்கன்றுகளை வாங்கினா்.
தொடா்ந்து கல்லூரி வாகனங்களில் சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட 65 மாணவிகள் இருங்களூா் அடா்காட்டில் மரக்கன்றுகளை நட்டனா். தொடா்ந்து பல்வேறு உதவிகளை செய்வதாக கல்லூரி தரப்பில் இருங்களூா் ஊராட்சித் தலைவா் வின்சென்டிடம் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

