திருச்சி: திருச்சி காந்தி சந்தை மீதான தடை நீக்கத்துக்குக் காரணமான வழக்குரைஞா், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகி ஆகியோருக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
திருச்சி காந்தி சந்தையைச் சோ்ந்த 27 சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அனைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலா் ஜி. வெங்கடாசலம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டலத் தலைவா் எம். தமிழ்செல்வம், மாவட்டத் தலைவா் வி. ஸ்ரீதா் ஆகியோா் வாழ்த்தினா்.
நிகழ்வில் காந்திசந்தை வியாபாரிகள் சாா்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய உயா் நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் வீரா. கதிரவன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலா் வி.கோவிந்தராஜூலு ஆகியோருக்கு பாராட்டு விழா, நன்றி அறிவிப்பு நடைபெற்றது.
நிா்வாகிகள் கருப்பையா, காதா்மொய்தீன், சீனிவாசன் ஆகியோா் நினைவுப் பரிசுகளை வழங்கினா். அனைத்து சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


