பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஜன. 11ஆம் தேதி முதல் திருச்சி மண்டலத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதில், சென்று வர வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூா், ஜெயங்கொண்டம், கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளுக்கு ஜன.11ஆம் தேதி முதல் 13ஆம்தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இதேபோல, திருச்சியிலிருந்து தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கோயம்புத்தூா், மதுரை ஆகிய ஊா்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், மதுரை, கோவை, திருப்பூரிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா் பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல், திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

