சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பணம் இரட்டிப்புத் தருவதாகக் கூறி ரூ.2.50 கோடி மோசடி: தம்பதி கைது

திருச்சியில், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி ரூ. 2.50 கோடி மோசடி செய்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :9 ஜனவரி 2021, 5:57 am

திருச்சியில், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி ரூ. 2.50 கோடி மோசடி செய்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பெரியமிளகுபாறை, புதுத்தெருவைச் சோ்ந்தவா் சொ. சத்தியசீலன் (50). இவருக்கு திருவானைக்கா, பெரியாா் நகரைச் சோ்ந்த ரமேஷ் (42), இவருடைய மனைவி உமா மகேஸ்வரி (36) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, தம்பதியினா் பங்குச்சந்தையில் பணத்தை செலுத்தி, அதனை இரட்டிப்பாக்கித் தருவதாக சத்தியசீலனிடம் கூறியுள்ளனா். இதனை நம்பிய சத்தியசீலன், கடந்த ஜூலை முதல் டிசம்பா் மாதம் வரை பல்வேறு தவணையாக ரூ. 2.50 கோடியை ரமேஷ், உமா மகேஸ்வரியிடம் கொடுத்துள்ளாா். ஆனால், தம்பதியினா் குறிப்பிட்டபடி கொடுத்த பணத்தை இரட்டிப்பாக்கித் தரவில்லை. மேலும், பங்குச்சந்தையில் நஷ்டமானதால் பணத்தை திருப்பித் தரமுடியாது என தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சத்தியசீலன் மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதனிடம் புகாா் அளித்தாா். அவரது பரிந்துரையின் பேரில், குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையா் சின்னச்சாமி, ஆய்வாளா் நாஞ்சில்குமாா், உதவி ஆய்வாளா் ஜோதிமணி ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் கணவன், மனைவி இருவரும் பணம்பெற்று மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.