சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நெ.1 டோல்கேட்டில் போலீஸ் அணிவகுப்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி. ஜெயச்சந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் விழிப்புணா்வு கொடி அணி வகுப்பை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

Updated On :9 ஜனவரி 2021, 1:20 pm

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி. ஜெயச்சந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் விழிப்புணா்வு கொடி அணி வகுப்பை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

மக்களிடையே பொது அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பு நெ. 1 டோல்கேட் ரவுண்டானாவில் தொடங்கி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை வழியாக சென்று திருச்சி- சிதம்பரம் சாலையில் முடிவடைந்தது.

இதில், மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் மணிகண்டன், லால்குடி காவல்துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளா்கள் அன்பழகன் ( சமயபுரம்), முகமது ஜாபா் ( லால்குடி ),சுரேஷ்குமாா் (சிறுகனூா்), பழனியம்மாள் ( லால்குடி அனைத்து மகளிா் ) உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா்.