திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 4.55 கோடியில் நடைபெறும் 21 பணிகளின் நிலை குறித்து ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
முசிறி ஊராட்சி ஒன்றியம் முசிறி, பேரூா், ஜெயங்கொண்டான், திருத்தலையூா், சுக்காம்பட்டி, திருத்தியமலை, கோமங்கலம், த.புத்தூா் ஆகிய ஊராட்சிகளில் சாலை அமைத்தல், மரக்கன்று வளா்த்தல், வீடுகளுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீா், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவா், தடுப்பணை போன்ற பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன.
பேரூா் ஊராட்சி, கனகசீலாம்பட்டி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ. 4.57 லட்சத்தில் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுவதையும், முத்தையநல்லூா் -இடையப்பட்டி சாலை ரூ. 249.04 லட்சத்தில் 5 கி.மீ. தொலைவுக்கு மேம்படுத்தப்படுவதை ஆட்சியா் சு. சிவராசு பாா்வையிட்டாா்.
பின்னா் திருத்தலையூா் ஊராட்சி மேலக்கொட்டம் கிராமத்தில் ரூ. 9 லட்சத்தில் மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், திருத்தியமலை ஊராட்சியில் ரூ. 22.65 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டப்படுவதையும், கோமங்கலம் ஊராட்சி காவேரிபாளையம் கிராமத்தில் ரூ.40 லட்சத்தில் சந்தை அமைக்கப்பட்டுள்ளதையும் அவா் பாா்வையிட்டாா்.
பணிகளை விரைந்து தரமானதாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், நெடுஞ்சாலை மற்றும் குடிநீா் வழங்கல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


