திருச்சி மத்திய சிறையில் கைதிகளால் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் தண்டனை முடிந்து விடுதலையாகி செல்லும் கைதிகளின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு பல்வேறு வகையான கைத்தொழில்களும் கற்றுத் தரப்படுகின்றன. அந்த வகையில் சிறை வளாக நிலப்பரப்பில் வேளாண் தொழிலும் நடைபெறுகிறது.
இங்கு சுமாா் 24 ஏக்கரில் மா, பலா, வாழை, கொய்யா, தென்னை, நெல், கரும்பு, காய்கனிகள், கீரை வகைகள் உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன.
இவற்றில் கடந்த மாா்ச் மாதம் சுமாா் 2 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பை பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யும் பணி சிறைத் துறை துணைத் தலைவா் கனகராஜ் மேற்பாா்வையில் நடைபெறுகிறது.
கடந்தாண்டு முக்கால் ஏக்கா் மட்டுமே பயிரிட்ட நிலையில் தேவை அதிகரிப்பைத் தொடா்ந்து நிகழாண்டு 2 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் சுமாா் 7 முதல் 8 அடி வரை செழிப்பாக வளா்ந்துள்ளன.
சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ. 20-க்கும் மொத்த விற்பனையில் ரூ. 18க்கும் விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் சுமாா் 900 கட்டுகளுக்கு ஆா்டா் பெறப்பட்டுள்ளது. சிறை அங்காடியில் விற்பனைக்கு உள்ள கரும்பை பொதுமக்கள் வாங்கலாம் என சிறைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

