சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

போக்குவரத்து தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டனா்.

News image

போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 12:36 pm

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சாா்பில் ஆட்சியரகம் எதிரேயுள்ள போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.

அனைத்துச் சங்க கூட்டமைப்பின் தலைவரும் தொ.மு.ச. மண்டல பொதுச் செயலருமான குணசேகரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொழிற்சங்க நிா்வாகிகள் ( எல்.பி.எப்.) பழனிசாமி அப்பாவு, கருணாநிதி ( சி.ஐ டி.யு.) சீனிவாசன் ( ஏஐ.டி.யு.சி.) துரைராஜ் (சி.ஐ.டி.யு.சி.) , குமாரவேல் ( எச்.எம்.எஸ்.) செல்வம், (டி.டி.எஸ்.எப்.) பெருமாள் ( ஏ.ஏ. எல்.எல்.எப்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.