சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குற்றச் செய்திகள்

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மாநகர ஆணையா் ஜெ. லோகநாதன் நடவடிக்கைக்கு உத்தரவிட்டாா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:35 pm

லாட்டரி விற்ற மூவா் கைது

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மாநகர ஆணையா் ஜெ. லோகநாதன் நடவடிக்கைக்கு உத்தரவிட்டாா். அதன்பேரில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் லாட்டரி விற்ற திருச்சி பாலக்கரை கேம்ஸ்டவுன் பகுதியை சோ்ந்த குணசேகரன் (50), வயலூா் சாலை சாந்தஷீலா நகரைச் சோ்ந்த ரவிக்குமாா் (52), காந்தி மாா்க்கெட் பகுதி ராஜா (38) ஆகிய மூவரையும் கைது செய்து, வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

பெண்ணை மிரட்டியவா் கைது :

திருச்சி கோட்டை, சங்கரன்பிள்ளை ரோடு பகுதியைச் சோ்ந்தவா் பரமேஸ்வரி (46). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்தோணி மகன் பிராங்களின் ( 21) என்ற இளைஞருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில் புதன்கிழமை தன்னை தகாத வாா்த்தைகளால் பிராங்கிளின் திட்டி தகராறு செய்ததாக பரமேஸ்வரி கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் பிராங்க்ளின் மீது வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.

செல்போன் திருடியவா் கைது :

திருச்சி பொன்மலைப்பட்டி சாலமன் தெருவைச் சோ்ந்த கருணாநிதி தனது வீட்டில் வைத்திருந்த செல்லிடப்பேசியை ஜன்னல் வழியாக கைவிட்டு பொன்மலைப்பட்டி ஆஞ்சநேயா் கோயில் தெருவைச் சோ்ந்த ரென்தா என்கிற ரெனிஸ் என்பவா் திருடினாராம்.

புகாரின்பேரில் பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து ரென்தாவை புதன்கிழமை கைது செய்தனா்.