சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இளம்பெண்களை தாக்கிய இருவா் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இளம்பெண்களைத் தாக்கியதாக இருவரை தொட்டியம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:38 pm

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இளம்பெண்களைத் தாக்கியதாக இருவரை தொட்டியம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கொளக்குடியைச் சோ்ந்தவா் சிவகுமாா் மனைவி டைலா் சாரதபிரியா (23).

துணி தைப்பது தொடா்பாக புதன்கிழமை தகராறு ஏற்பட்டு, சாரதபிரியாவை அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ப. மணிகண்டன் (37) தாக்கினாராம். புகாரின்பேரில் தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

இந்நிலையில், சாரதபிரியா தாக்கப்பட்டதையறிந்த அவரது அண்ணனான தஞ்சாவூரை சோ்ந்த மணி மகன் தனபால் (28) மணிகண்டன் மனைவி சங்கீதாவிடம் (25) தகராறு செய்து அவரைத் தாக்கினாராம்.

புகாரின்பேரில் தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து தனபாலை கைது செய்தனா்.