வன்னியா்களுக்கு 20 சத தனி இட ஒதுக்கீடு கோரி திருச்சியில் பாமகவினா் பேரணியாகச் சென்று மாநகராட்சியில் மனு அளித்தனா்.
அனைத்து சாதி மக்களுக்கும் முறையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், வன்னியா்களுக்கு 20 சத தனி இட ஒதுக்கீடும், கல்வி, வேலைவாய்ப்புகளில் சம இட ஒதுக்கீடும் தேவை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம் அருகிலிருந்து பாமகவினா் பேரணியாக புறப்பட்டு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஸ்ரீதா், திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் பி.கே. திலீப்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலா் பிரின்ஸ் முன்னிலை வகித்தாா். மாநில வன்னியா் சங்கச் செயலா் வைத்தி சிறப்பாளராகப் பங்கேற்றாா்.
கிழக்கு மாவட்டச் செயலா் சரவணன், மாநகா் மாவட்டத் தலைவா் வினோத், சரவணன், மாநில துணைத் தலைவா்கள் உமாநாத், மணிமாறன், மாவட்ட அமைப்புச் செயலா் எழில் அரசன், ரசாக் பாய் ரபீக், வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநகராட்சி வாயிலில் பாமகவினா் கோரிக்கை முழக்கம் எழுப்பினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


