சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மழையால் பயிா் சேதம்: 1,489 விவசாயிகளுக்கு ரூ. 78.46 லட்சம் நிவாரணம்

திருச்சி மாவட்டத்தில் மழை மற்றும் சூறாவளியால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணமாக 1,489 விவசாயிகளுக்கு ரூ. 78.46 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 1:51 pm

திருச்சி மாவட்டத்தில் மழை மற்றும் சூறாவளியால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணமாக 1,489 விவசாயிகளுக்கு ரூ. 78.46 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மழை, சூறாவளியால் தோட்டக்கலைப் பயிா்கள் சேதமடைந்ததை, வருவாய்த் துறை மற்றும் தோட்டக்கலை அலுவலா்கள் கூட்டு புலத் தணிக்கை செய்து 33 விழுக்காடுக்கு மேல் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நிவாரணம் கோரி அரசுக்கு மாவட்ட நிா்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டது. இதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் சேதமடைந்த 581.22.8 ஹெக்டோ் தோட்டக்கலைப் பயிா்களுக்கு மாநிலப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 2020 ஏப்ரல் மாதத்தில் சேதமடைந்த 581.22.8 ஹெக்டோ் நிலப்பரப்புக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் வட்டத்தில் 862 விவசாயிகள், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் 381, லால்குடி வட்டத்தில் 113, முசிறி வட்டத்தில் 81, தொட்டியம் வட்டத்தில் 47, துறையூா் வட்டத்தில் 4, திருச்சி கிழக்கு வட்டத்தில் 1, ஆக மொத்தம் 1,489 விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிா் சேதங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.